Pages

Subscribe:

Friday, March 2, 2012

அய்யய்யோ அது என்ன ஆச்சோ ?

ஙே....  ன்னு விழிக்காதீங்க தலைப்ப பார்த்து , இதுவும் ஒரு “குட்டி” கதை தான் !

       இமயமலையல ஒரு சாமியார் ரொம்ப பிரபலமா இருந்தாரு, அவருக்கு ஏகப்பட்ட மவுசு, எல்லாம் தெரிஞ்சவர், காலத்தை கடந்தவர் , மகா ஞானி இப்படி எல்லாம் அவர பார்த்தவங்க சொல்லுவாங்க !

     அவருக்கிட்ட ஏராளமான சிஷ்ய கோடிங்க இருந்தாங்க! சாமியார் ஆழ்நிலைல (தியானம், இல்ல பயிற்சின்னு வச்சிக்கலாம்)  ,  இருக்கும் போது திடீர்ன்னு , ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ ” அப்படின்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சிடுவாராம் , அவரு கூட இருந்த சிஷ்யர்களுக்கு ரொம்ப நாளா ஒன்னும் விளங்கலையாம் என்ன ஆச்சு சாமியாருக்கு  இவரு அடிக்கடி இப்படி அழ ஆரம்பிச்சிடுறாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க

        ஒரு நாள் ஒரு சிஷ்யன் வந்து குருவே எனக்கு ஒரு மாசம் வெளியில போக அனுமதி வேணும், வீட்டு ஞாபகம் வந்துடுச்சி அனுமதி தரனும்ன்னு கேட்டானாம் , அதுக்கு குருவும் வீட்டு ஞாபகம் வந்தவன ஆசிரமத்துல வச்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னிட்டு போயிட்டு , நீ விரும்பும் போது வா அப்படீன்னு சொல்லி அனுப்பி வச்சாராம் .

        ஒரு மாதம் கழிச்சு அந்த சிஷ்யனும் ஆசிரமத்துக்கு வந்தானாம், இப்படி ஒரு நாள் குரு ஆழ்நிலைல இருக்கும் போது “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அப்படீன்னு சொல்லி அழ ஆரம்பிச்சாராம் , உடனே ஊருக்கு பேன சிஷ்யன் எழுந்து ,

      குருவே அதுக்கு இப்ப 19 வயசு ஆகுது , காலேஜ்ல படிக்குது நல்லா தான் இருக்குது அத பத்தி இனி நீங்க கவலைபடவேணாம் ” , அப்படின்னு சொன்னானாம் , உடனே குருவுக்கு ஒன்னும் புரியல , என்ன சொல்ற சிஷ்யான்னு கேட்டாராம் , அதான் குருவே நீங்க அடிக்கடி சொல்லி அழறீங்களே ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அது தான் குருவேன்னு சொன்னாம்! அப்படியே ஷாக் ஆயிட்டாராம் குரு !

     சிஷ்யன் சொன்னானாம் , ஒரு மாசம் வெளிய போனது உங்களுக்காக தான் , உங்க வரலாறு & புவியியல் எல்லாம் விசாரிச்சிக்கிட்டு உங்க ஊருக்கு போயி உங்க மனைவிய சந்திச்சேன். அவங்க கிட்ட உங்கள பத்தி சொல்லிட்டு, குரு அடிக்கடி இப்படி பொலம்பராரு “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டான்,

    அதுக்கு உங்க சம்சாராம் சொன்னாங்க பாவி மனுசன் கடன் தொல்லையால நான் நிறை மாத கர்பிணியா இருக்கும் போது என்னை அம்போன்னு விட்டுட்டு ஓட்டிட்டான் ,  போயி சொல்லு தம்பி அதுக்கு 19 வயசு ஆகுது , காலேஜ் படிக்குதுன்னு சொல்லு உங்க துப்புக்கெட்ட குருக்கிட்ட , இது தான் குருவே நடந்துன்னு சொன்னானாம் சிஷ்யன்,

    உடனே அந்த குரு அந்த சிஷ்யன் கால்ல விழுந்துட்டாராம் !


     இதுல இருந்து என்ன தெரியுதுன்னா , யார் யாருக்கு என்ன புரிஞ்சதோ நீங்களே அர்த்தம் பண்ணிங்கோங்க ! ஙே.............






1 comment:

  1. சரி..சரி....இதுக்கெல்லாம் கால்ல விழாதீங்க குருவே ! ( சும்மா!.....கோவிச்சுக்காதீங்க )

    ReplyDelete