Pages

Subscribe:

Wednesday, March 14, 2012

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!




WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.
 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

 சரி இப்ப விசயத்துக்கு வருவோம் 

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி 
             மடி கணின்ன்னா மடிக்கிற கணினி , மடி மேல வச்சிக்கிற கணினி இல்லன்னு இப்பவாவது தெரிஞ்சிக்கிகங்க 



Monday, March 5, 2012

சனி நீராடு (ஒரு ஆய்வு கட்டுரை)

வாங்க நண்பர்களே சனி நீராடு பற்றி அலசுவோம்

      சில நாட்களாகவே சனி நீராடு என்ற சொல் அரோக்கியத்த பற்றி அக்கறை உள்ளவங்க அடிக்கடி சொல்லும் சொல்லா இருக்கிறது.

       அது என்ன சனி நீராடு , சனிக்கிழமை தான் குளிக்கனுமா, அதுவும் எண்ணை தேய்த்து மட்டும் தான் குளிக்கனுமா , இல்லை சனி கிழமை ஆனா டாஸ்மாக்ல போய் தண்ணியடிக்கிறத பற்றி சொல்றாங்களா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.

    சனி நீராடு பற்றி பல கருத்துகள் நிகழ்கிறது உலகில் , அது என்னன்னு பார்க்கலாம்.

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.

4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க

ஒன்னொன்னா பார்க்கலாம்

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்
                                                                                                சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

                                                                                                                                                ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா அவசர அவசரமா குளிக்கமா பொறுமையா உடல் அழுக்கு போகும் வரையில் குளிக்க வேண்டும் என்று குறிப்பதாக அமைகிறது, கிராமங்களில் ஒரு பழஞ் சொல் இருக்கிறது (அழுக்கு போக குளிச்சவனும் இல்ல , ஆசை தீர அணைச்சவனும் இல்லை ) , எனவே அழுக்கு போக குளிங்க

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.
                                                 நம்ப நாட்டு சீதோஷ்ன நிலைக்கு எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளித்தால் தான், உடலுக்கு தேவையான சக்தியையும் என்றும் மாறா இளமையையும் கிடைக்கும்ன்னு சொல்லறாங்க சிலர் , குளிர்ந்த நீரில் குளிப்பது மதம் சார்ந்த நிகழ்வுல நாம கண் கூடா காண முடியும்

கடைசியாக
                           4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க 
                               அது என்னன்னா சனி நீராடு என்பது சனியை குறிப்பது இல்லை அசனி நீராடு என்ற சொல் தான் மறுவி சனி நீராடு என்று ஆகி விட்டது . அசனி என்றால் சாம்பிராணி இலையை குறிக்கும் சொல் , நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிப்பதை அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றனர்

இந்த தலைமுறை பசங்க சனி நீராடுன்னா , சனிக்கிழமை மது அருந்துவதை தான் இப்படி சொல்லியிருக்காங்கன்னு நம்பறாங்க !

டிஸ்கி :-
                   சனி நீராடு சொன்ன ஒளவையார் வந்து விளக்கினா ஒழிய இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் பண்ணிக்க வேண்டியது தான்