Pages

Subscribe:

Wednesday, December 14, 2011

கண்ணாயிரம் எனது புதிய நண்பன்

     நண்பர் ஒருத்தர் போன்ல ஒரு அட்ரஸ் சொல்லி நான் இங்க தான் இருக்கேன் , வந்துடுங்கன்னு சொன்னாரு,  அவரு சொன்ன அட்ரஸ்ல போனா வாசல்ல எழுதியிருந்த பெயர் பலகை என்னை வியப்பில் ஆழ்த்தியது !

    கேட்ல நண்பர் பேரை சொன்ன உடனே கேட் திறந்து,  சார் லெப்ட்ல போய்ட்டு இரண்டாவதா வரும் பாருங்க அது தான் ஆபீஸ் ரூம்ன்னு சொன்னார் கேட்ல இருந்தவரு , அவருக்கு நான் நன்றி சொல்லிட்டு நண்பரை தேடிப் போனேன்,

    நண்பரும் இன்னொருவரும் பேசிட்டு இருந்தாங்க , ரெண்டு பேருக்கு வணக்கம் சொல்லிட்டு , நான் சொல்லுங்க சார்ன்னு சொன்னேன் , சார் இவருக்கு ஒரு கம்பியூட்டர் வேணுமாம் நல்லதா ஒன்னு பார்த்து கொடுங்க , விலையும் கம்மியா இருக்கனும் சொன்னாரு .

     அதுக்கு என்ன தாராளமா கொடுத்துடலாம்ன்னு சொல்லிட்டு அத பற்றி பேசி முடிச்ச பிறகு , மணி அடிக்கிற சத்தம் கேட்டது . நண்பர் சொன்னரு ஸ்கூல் பெல் அடிச்சிட்டாங்க வாங்க வெளில போய் பசங்கள பார்த்துட்டு வரலாம்ன்னு சொன்னார்.

    பசங்க ஒரே கூச்சல் ,  4 பேரா, 3 பேரா,  தோள் மேல கைய போட்டுக்கிட்டு போறத பாக்கும் போது எனக்கு வியப்பா இருந்தது , தனி தனியாவும் பசங்க விளையாடிட்டு இருந்தாங்க , அவங்கள பார்த்து ஒருத்தர் அப்ப அப்ப எச்சரிக்கை பண்ணிட்டு இருந்தாரு. புது கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்கிற இடத்துக்கு யாரும் போகாதீங்கன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

    ஆற்று மணல்ல பசங்க விளையாடறத பாக்கும் போது எனக்கும் அவங்க கூட விளையாடனும் போல இருந்தது, மொத்தம் ஒரு 25 - 30 பசங்க இருந்தாங்க , ஒருத்தன் மட்டும் யார் கூடவும் சேராம ஒரு மரத்த பிடிச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்தான் ,

தம்பி நீ விளையாட போகலியான்னு கேட்டேன் , இல்ல சார்ன்னு சொல்லிட்டு , நீங்க இங்க புதுசா இன்னைக்கு தான் வறீங்களான்னு சார்ன்னு கேட்டான் , ஆமாம் தம்பின்னு சொன்னேன்.

    சார் நான் கிறிஸ்மஸ்க்கு ஊருக்கு போக போறேன்னு சொன்னான் . அவன் வீட்டுக்கு போறத, அறிமுகம் இல்லாத என்கிட்ட சொல்லும் போது அவன் முகம் சந்தோசத்துல திளைச்சது . அப்ப தான் ஞாபகம் வந்தது அந்த ஸ்கூல்ல ஹாஸ்டல் இருக்கிற விசயம்.

    தம்பி சாப்ட்டியா , இல்ல சார் 2 மணிக்கு தான் சாப்பாட்டு நேரம்ன்னு சொல்லிட்டு , சார் நீங்க வண்டி வச்சியிருக்கீங்களான்னு கேட்டான் , ஆமாப்பா 2 வீலர் பஜாஜ் டிஸ்கவர்ன்னு சொன்னேன் . அவன் உடனே என்ன சிசி சார் உங்க வண்டின்னு கேட்டான் ,  நான் 135 சிசி தம்பின்னு சொன்னேன்,

    சார் என்னைய அந்த வண்டியில உக்கார வச்சி ஒரு ரவுண்ட் அடிப்பீங்களா, இது வரைக்கும் வண்டில நான் போனது இல்ல சொல்ல , எனக்கு பரிதாபமா இருந்தது நான் நண்பர கைய சீண்ட , அவர் கூட்டிட்டு போங்கன்னு சொன்னரு,  அவன வண்டியில ஒரு ரவுண்ட் அடிக்க அவன் போட்ட சந்தோச கூச்சலும் , ஆரவாரமும்,  எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ஆயிடுச்சி.

    ஒரு ரவுண்ட் முடிந்ததும், அந்த தம்பி வண்டிய விட்டு இறங்கி சார் ரொம்ப நன்றி சார், உங்கள நான் மறக்க மாட்டேன்,என் ப்ரண்டுகிட்ட எல்லம் சொல்லுவேன்னு சொன்ன பிறகு ,உங்க பேர் என்ன சார்ன்னு கேட்டான். தம்பி என் பேரு கேசவன் , உன் பேர் என்ன ? என் பேரு கண்ணாயிரம் சார். பேரை கேட்டவுடன் இதயம் கனத்தது

    சரி கண்ணாயிரம் நான் திரும்பவும் வரும் போது , உன்ன வெளியில ஒரு நாள்கூட்டிட்டு போறேன் சொன்ன உடனே அவன் முகத்துல 1000 வாட்ஸ் பிரகாசம் . அவனுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு நண்பருக்கும் சொல்லிட்டு வெளியே வந்தேன் .

    கேட்ல இருக்குறவர் வண்டி சத்தம் கேட்டுட்டு கேட்ட திறந்து விட்டு ஒரு வணக்கம் வச்சாரு அவருக்கு சத்தமா ஒரு வணக்கம் சொல்லிட்டு,  வெளியில வந்து வண்டிய நிறுத்தி , உள்ள நுழையும் போது பார்த்த அந்த பெயர் பலகை திரும்பி ஒருதரம் பார்த்தேன்.

பார்வை இழந்தோர் உண்டுஉறைவிடப்பள்ளி 

மனதில் நினைத்துக்கொண்டேன் அடிக்கடி இந்த பள்ளிக்கு வரவேண்டும் என்று 


டிஸ்கி :
              இது ஒரு உண்மை கதை.

              இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் , 
              பார்வை இழந்தவர்கள் , என்னை தவிர 
             

Friday, December 9, 2011

” ஹப் ” இதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?!

     வண்டிய எடுக்கும் போது தெரியாம போச்சு இந்த வண்டி இந்த அளவுக்கு இன்னைக்கு அடி வாங்க போகுதுன்னு , நானும் தான் !

    நண்பர் ஒருவர் நிலம் வாங்கும் விசயமா கூப்பிட்டு இருந்தாரு , 20 கி.மீ தூரத்துல இருக்கிற ஒரு ஊர் கிட்ட வந்துடுங்க போகலாம்ன்னு சொன்னாரு . சரி நான் வெட்டியா உட்கார்ந்துகிட்டு இருக்கிறது இவருக்கு தெரிஞ்சி போச்சு, போகலனைன்னா நல்லா இருக்காதுன்னிட்டு வண்டில கிளம்பிட்டேன்.

    இது வரைக்கு அந்த ஊருக்கு நான் போனது இல்ல , இது தான் முதல் தடவை , 10 கி.மீ தாண்டி போயிட்டு இருந்தேன், திடீர்ன்னு ஒருத்தன் வண்டி குறுக்கால வந்து நின்னான். வண்டிய நிறுத்தி ஏண்டா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா திட்டினேன், இல்லைனே இனிமே தான் சொல்லனும்ன்னான், எனக்கு இன்னும் கோவம் அதிகமாயிடுச்சி .

      பக்கத்துல இருக்கிற வீட்ல ஒருத்தர் காலமாயிட்டாரு , அத சொல்லத்தான் போயிட்டு இருக்கேன். என்னை அந்த ஜங்சன்ல விட்டுங்க, கடைசி பஸ் அத பிடிக்கனும்ன்னு சொன்னான் ,  வழக்கமா நான் யாருக்கும் லிப்ட் கொடுக்கிறது இல்ல . முடியாதுன்னு சொன்ன , என்ன தள்ளிவிட்டு அவன் வண்டிய ஓட்டிட்டு போயிடுவான் போல இருந்தான்.

   என்ன ஏதுன்னு கேக்காமலேயே பின்னாடி ஏறி உட்கார்ந்துட்டு சார் போங்க சார் சீக்கிரம் , வண்டி போயிட போகுதுன்னு உத்தரவு போட்டான். நானும் எதுவும் பேசாம ஒரு உதவியா நினைச்சுக்கிட்டு வண்டிய கிளப்பினேன். 

           கொஞ்ச தூரம் போகல சார் சீக்கிரம் போங்க சார் , நான் நடக்கிற வேகத்துக்கு வண்டிய ஓட்டிட்டு இருக்கீங்கன்னு சொல்ல , நான் கோபமாகி தம்பி வேணும்னா நீ இறங்கி நடந்து போ , வேகமா என்னால ஓட்ட முடியாதுன்னு சொன்னேன். சார் கோவிச்சிகாதீங்க , பஸ் போயிடும் அதனால தான் அப்படி சொன்னேன்னான் , எனக்கும் கொஞ்சம் பரிதாபமா தான் இருந்தது .

       தம்பி இந்த ஏரியாக்கு நான் புதுசு , ரோடு எப்படி இருக்குன்னு தெரியாது , அதனால வேகமா போகமுடியாதுன்னு நான் சொல்ல ,  அதுக்கு அவன், நான் சொல்றேன் நீங்க ஓட்டுங்க சார்ன்னு சொன்னான். 

      வண்டி ஒரு 60 கி.மி. வேகத்துல போயிட்டு இருந்தது , சார் ”ஹப்” “ஹப்” சார் னான், நானும் வேகத்த கூட்டி ஒரு 70 க்கு வந்தேன் , அவன் திரும்பவும் சார் “ஹப்” ”ஹப்” கத்த , நான் திரும்பவும் வேகத்த கூட்ட, 80 கி.மி. வேக முள்ளு காட்டுச்சி , 

         வண்டி திடிர்ன்னு பறக்கறா மாதிரி ஒரு உணர்வு அவ்வளவு தான் தெரியும் வண்டி எங்களுக்கு முன்னாடி சங்கு சக்கரம் சுத்தறா மாதிரி சுத்திக்கிட்டு இருக்குது. ரெண்டு பேரும் தார் ரோட்டுல உருண்டுக்கிட்டு இருந்தோம் 
  
    ரெண்டு பேருக்கும் கை, கால் முட்டியேல்லாம் ஒரே சிராய்ப்பு , அவன் பின்னாடி உட்கார்ந்து இருந்ததால அவனுக்கு அடி அதிகம் , எனக்கு அந்த வண்டி பம்பர் கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கிச்சு 


      கோவமா அவன்கிட்ட போய் கேட்டேன் ஏண்டா நான் தான் இந்த பக்கம் முதல் தடவையா வரேன் , நீயாவது சொல்ல கூடாதா ” இங்க ஸ்பீட் பிரேக்கர்”  இருக்குதுன்னு நான் கத்த ,

  அவன் முனகிகிட்டே சார் நான் தான் “ஹப்”  “ஹப்” ன்னு கத்திக்கிட்டே வந்தேனே சார்! சொல்ல , 

                டேய்”ஹப்ன்ன”  உங்க ஊர்ல ஸ்பீட் பிரேக்காடா...

     செய் கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 


Monday, November 28, 2011

மயக்கம் என்ன.? -சினிமா விமர்சனம் அல்ல


   காலைல ராசி பலன்ல சந்த்ராஷ்டமம்னு பாத்த உடனேயே உஷாராயிருக்கனும். ஆனா, வெவரம் பத்தாம வீட்டுக்காரம்மாகிட்ட வாங்கிக் கட்டறதுதான நம்ம பொழப்பே.!

   கடைலகூட பொண்ணுகள வேலைக்கு வச்சிக்கக் கூடாதுங்கறது அம்மிணி ஆர்டர். எல்லாம் நம்ம ஜொள்ளு விடறது தெரிஞ்சுதான். நம்ம மேல அவ்வளோ நம்பிக்கை.

  இன்னிக்கு காலைல கிளம்பும்போதே பக்கத்து ஃப்ளாட் ஏஞ்சல்,"அங்கிள் போற வழிலதான எங்க காலேஜ். என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா.?"-னு ஓடிவந்தா.

   'என்னடா கன்னிராசி இன்னிக்கு வொர்க் அவுட் ஆகுதே'-னு பாத்தா ஜன்னல்ல வூட்டுக்காரம்மா ஆட்டுன பூரிக்கட்டய பாத்ததும், "இல்லம்மா இன்னிக்கு மார்க்கட்ல கலக்சன் இருக்கு"-னு பொய் சொல்ல வேண்டியதாப் போச்சு.

   கிளம்பி மெயின் ரோட் சிக்னல்ல நின்னு கெளம்பும்போது தான் கவனிச்சேன், முன்னாடி போற ஸ்கூட்டில பொண்ணோட துப்பட்டா பின்வீல்ல மாட்டறா மாதிரி இருந்ததை.

   எச்சரிக்கலாம்னு ரெண்டுமூணு திருப்பமா துரத்திகிட்டுப் போயி, ஸ்கூட்டிய ஒருவழியா ஓவர்டேக் எடுத்து, "இந்தாம்மா..." என்று சொல்ல வாயெடுத்த போதுதான் அது நடந்தது.

   ”டமார்” ன்னு ஒரு சத்தம் வண்டி எதுலயோ மோதி நான் மயக்கம் போட்டிருந்தேன்.

      கண் விழிக்கும் போது ஏதோ ஹாஸ்பிடல் படுக்கையில் கிடந்தது தெரிந்தது.
அந்த ஸ்கூட்டி துப்பட்டா பொண்ணு யாருடனோ முதுகைக் காட்டிய படி, செல்லில் பேசிக்கொண்டிருந்தாள்.

   "கொஞ்ச தூரமாவே என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு. நான் கொஞ்சம் பயந்துட்டேன். வண்டிய வேகமா ஓட்டிட்டு போக ட்ரை பண்ணினா, அப்பவும் வேகமா துரத்திட்டு வந்து ஏதோ சொல்ல ட்ரை பண்ணாரு. 



    அப்பத்தான் எதிர வந்த வண்டி மோதி இப்படி ஆயிடுச்சு. ஆமா, மம்மி ஹாஸ்பிடல் தான். வாங்க..!"-னு அவ ஃப்ரண்ட் யாருகிட்டயோ சொல்லிகிட்டே திரும்பும் போதுதான் பார்த்தேன். யப்பா... அப்படி ஒரு அழகி. வலியையும் தாண்டி பிரமிக்க வைக்கும் பேரழகு.


  ஃபோனை கட் செய்தபடி திரும்பியவள், நான் கண் விழித்திருப்பதை பார்த்ததும் சிரித்தபடி சொன்னாள்.

    "முழிச்சுட்டீங்களா.? இப்பத்தான் உங்க வீட்ல பேசிட்டு ஃபோனை கட் பண்றேன்.!" என்று அவள் சொல்லும் போதுதான் கவனிச்சேன். அவள் கையிலிருந்தது என் மொபைல்.

   அடி சண்டாளி... என் வைஃப்கிட்டயா இவ்வளவு நேரம் ஃபாலோ பண்ணாரு, ஏதோ சொல்ல டரை பண்ணாருனு விளக்கம் சொல்லிட்டிருந்த.? அய்யோ, இந்நேரம் என் வீட்லருந்து அவ எப்படி கிளம்பிட்டிருப்பானு நினைக்கும் போதே , எனக்கு எதுவும் மோதாமலேயே இன்னொரு தடவை மயக்கம் போட்டுட்டேன்.!

      செய்கூலி இல்லை ஆனா சேதாரம் தான் அதிகம் 

Thursday, November 24, 2011

நாங்களும் பிரபல ப்ளாக்ரா ஆவோம்ல

         நானும் ப்ளாக்கராயிட்டேன் , நானும் ப்ளாக்கராயிட்டேன் , கேட்டுக்கோங்க , சும்மா கிடந்த தேரை இழுத்து இப்படி நடு தெருவுல விடுவாங்கன்னு நினைச்சுக்கூடப்பாக்கல , இந்த வேதாளம்(ட்விட்டர்)  இருக்கானே அவன் கூட ஒரு நாள் மப்புல பேசிட்டு இருக்கும் போது அண்ணே நீங்க ஏன் ப்ளாக் எழுத கூடாதுன்னு கேட்டான். தம்பி அந்த அளவுக்கு அண்னன் வொர்த் இல்ல சும்மா சாம்பிராணி போடாதன்னு சொன்னான், சரி அவனுக்கு தெளிஞ்சா சரியாயிடும்ன்னு விட்டுட்டேன்.


          ஏற்கனவே ஒரு ஐந்து வருசத்துக்கு முந்தி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி அந்த ப்ளாக்காரனே கடுப்புல அதை ப்ளாக்(Block)  பண்ணுவான்னு நினைக்கல,  பின்ன பிட்டு படத்த ப்ளாக்ல போட்டா எவன் தான் ப்ளாக் (Block )பண்ணாம இருப்பான். 


                            சரி மேட்டருக்கு வருவோம்,  மேட்டர்ன்னா அது இல்ல ஜொள்ளு விட வேணாம். நான் சொன்னது இந்த விசயத்துக்கு வருவோம்ன்னு, சரி எழுத ஆரம்பிச்சா குறைந்தது ஒரு நாலு பேராவது புகழனும், இல்ல துப்பனும் , பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன், அதுக்காக ஆன்மீக ப்ளாக்கரா என்னை பாத்துடாதீங்க , நான் என்ன எழுத போறனோ , யார் யாருக்கு டரியல் ஆகப்போகுதோ தெரியாது , பொறுமையா என் பின்னாடி வாங்க 

                          செய் கூலி இல்லை சேதாரம் உண்டு