Pages

Subscribe:

Wednesday, March 14, 2012

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!




WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.
 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

 சரி இப்ப விசயத்துக்கு வருவோம் 

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி 
             மடி கணின்ன்னா மடிக்கிற கணினி , மடி மேல வச்சிக்கிற கணினி இல்லன்னு இப்பவாவது தெரிஞ்சிக்கிகங்க 



Monday, March 5, 2012

சனி நீராடு (ஒரு ஆய்வு கட்டுரை)

வாங்க நண்பர்களே சனி நீராடு பற்றி அலசுவோம்

      சில நாட்களாகவே சனி நீராடு என்ற சொல் அரோக்கியத்த பற்றி அக்கறை உள்ளவங்க அடிக்கடி சொல்லும் சொல்லா இருக்கிறது.

       அது என்ன சனி நீராடு , சனிக்கிழமை தான் குளிக்கனுமா, அதுவும் எண்ணை தேய்த்து மட்டும் தான் குளிக்கனுமா , இல்லை சனி கிழமை ஆனா டாஸ்மாக்ல போய் தண்ணியடிக்கிறத பற்றி சொல்றாங்களா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.

    சனி நீராடு பற்றி பல கருத்துகள் நிகழ்கிறது உலகில் , அது என்னன்னு பார்க்கலாம்.

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.

4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க

ஒன்னொன்னா பார்க்கலாம்

1. சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தல்
                                                                                                சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடைவதாக கூறுகிறார்கள்

2. சனி கிரகம் மந்தமான கிரகம் அதனால பொறுமையா குளிக்கனும்.

                                                                                                                                                ஒரு சிலர் என்ன சொல்றாங்கன்னா அவசர அவசரமா குளிக்கமா பொறுமையா உடல் அழுக்கு போகும் வரையில் குளிக்க வேண்டும் என்று குறிப்பதாக அமைகிறது, கிராமங்களில் ஒரு பழஞ் சொல் இருக்கிறது (அழுக்கு போக குளிச்சவனும் இல்ல , ஆசை தீர அணைச்சவனும் இல்லை ) , எனவே அழுக்கு போக குளிங்க

3. அதெல்லாம் இல்லை சனி கிரகம் குளுமையான கிரகம் அதனால குளிர்ந்த நீரினால் குளிக்கனும்.
                                                 நம்ப நாட்டு சீதோஷ்ன நிலைக்கு எப்பொழுதும் குளிர்ந்த நீரில் குளித்தால் தான், உடலுக்கு தேவையான சக்தியையும் என்றும் மாறா இளமையையும் கிடைக்கும்ன்னு சொல்லறாங்க சிலர் , குளிர்ந்த நீரில் குளிப்பது மதம் சார்ந்த நிகழ்வுல நாம கண் கூடா காண முடியும்

கடைசியாக
                           4. மேல சொன்னதெல்லாம் உண்மை இல்லை அதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்றவங்களும் இருக்காங்க 
                               அது என்னன்னா சனி நீராடு என்பது சனியை குறிப்பது இல்லை அசனி நீராடு என்ற சொல் தான் மறுவி சனி நீராடு என்று ஆகி விட்டது . அசனி என்றால் சாம்பிராணி இலையை குறிக்கும் சொல் , நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிப்பதை அப்படி சொல்லியிருக்கலாம் என்று கூறுகின்றனர்

இந்த தலைமுறை பசங்க சனி நீராடுன்னா , சனிக்கிழமை மது அருந்துவதை தான் இப்படி சொல்லியிருக்காங்கன்னு நம்பறாங்க !

டிஸ்கி :-
                   சனி நீராடு சொன்ன ஒளவையார் வந்து விளக்கினா ஒழிய இப்படி ஆளாளுக்கு ஒரு அர்த்தம் பண்ணிக்க வேண்டியது தான்




                                               

Friday, March 2, 2012

அய்யய்யோ அது என்ன ஆச்சோ ?

ஙே....  ன்னு விழிக்காதீங்க தலைப்ப பார்த்து , இதுவும் ஒரு “குட்டி” கதை தான் !

       இமயமலையல ஒரு சாமியார் ரொம்ப பிரபலமா இருந்தாரு, அவருக்கு ஏகப்பட்ட மவுசு, எல்லாம் தெரிஞ்சவர், காலத்தை கடந்தவர் , மகா ஞானி இப்படி எல்லாம் அவர பார்த்தவங்க சொல்லுவாங்க !

     அவருக்கிட்ட ஏராளமான சிஷ்ய கோடிங்க இருந்தாங்க! சாமியார் ஆழ்நிலைல (தியானம், இல்ல பயிற்சின்னு வச்சிக்கலாம்)  ,  இருக்கும் போது திடீர்ன்னு , ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ ” அப்படின்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சிடுவாராம் , அவரு கூட இருந்த சிஷ்யர்களுக்கு ரொம்ப நாளா ஒன்னும் விளங்கலையாம் என்ன ஆச்சு சாமியாருக்கு  இவரு அடிக்கடி இப்படி அழ ஆரம்பிச்சிடுறாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க

        ஒரு நாள் ஒரு சிஷ்யன் வந்து குருவே எனக்கு ஒரு மாசம் வெளியில போக அனுமதி வேணும், வீட்டு ஞாபகம் வந்துடுச்சி அனுமதி தரனும்ன்னு கேட்டானாம் , அதுக்கு குருவும் வீட்டு ஞாபகம் வந்தவன ஆசிரமத்துல வச்சிக்கிட்டா நல்லா இருக்காதுன்னிட்டு போயிட்டு , நீ விரும்பும் போது வா அப்படீன்னு சொல்லி அனுப்பி வச்சாராம் .

        ஒரு மாதம் கழிச்சு அந்த சிஷ்யனும் ஆசிரமத்துக்கு வந்தானாம், இப்படி ஒரு நாள் குரு ஆழ்நிலைல இருக்கும் போது “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அப்படீன்னு சொல்லி அழ ஆரம்பிச்சாராம் , உடனே ஊருக்கு பேன சிஷ்யன் எழுந்து ,

      குருவே அதுக்கு இப்ப 19 வயசு ஆகுது , காலேஜ்ல படிக்குது நல்லா தான் இருக்குது அத பத்தி இனி நீங்க கவலைபடவேணாம் ” , அப்படின்னு சொன்னானாம் , உடனே குருவுக்கு ஒன்னும் புரியல , என்ன சொல்ற சிஷ்யான்னு கேட்டாராம் , அதான் குருவே நீங்க அடிக்கடி சொல்லி அழறீங்களே ” அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அது தான் குருவேன்னு சொன்னாம்! அப்படியே ஷாக் ஆயிட்டாராம் குரு !

     சிஷ்யன் சொன்னானாம் , ஒரு மாசம் வெளிய போனது உங்களுக்காக தான் , உங்க வரலாறு & புவியியல் எல்லாம் விசாரிச்சிக்கிட்டு உங்க ஊருக்கு போயி உங்க மனைவிய சந்திச்சேன். அவங்க கிட்ட உங்கள பத்தி சொல்லிட்டு, குரு அடிக்கடி இப்படி பொலம்பராரு “ அய்யய்யோ அது என்ன ஆச்சோ “ அதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டான்,

    அதுக்கு உங்க சம்சாராம் சொன்னாங்க பாவி மனுசன் கடன் தொல்லையால நான் நிறை மாத கர்பிணியா இருக்கும் போது என்னை அம்போன்னு விட்டுட்டு ஓட்டிட்டான் ,  போயி சொல்லு தம்பி அதுக்கு 19 வயசு ஆகுது , காலேஜ் படிக்குதுன்னு சொல்லு உங்க துப்புக்கெட்ட குருக்கிட்ட , இது தான் குருவே நடந்துன்னு சொன்னானாம் சிஷ்யன்,

    உடனே அந்த குரு அந்த சிஷ்யன் கால்ல விழுந்துட்டாராம் !


     இதுல இருந்து என்ன தெரியுதுன்னா , யார் யாருக்கு என்ன புரிஞ்சதோ நீங்களே அர்த்தம் பண்ணிங்கோங்க ! ஙே.............






Thursday, March 1, 2012

ஒரு குட்டி(சின்ன)க்கதை

தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நினைக்காதீங்க !

         இது புத்தர் காலத்துல நடந்த கதை , புத்தரோட சிஷ்யர்கள் இரண்டு பேர் பயணம் செய்துக்கிட்டு இருந்தாங்களாம் , பயணம்ன்னா கார், பஸ் அந்த மாதிரி இல்லை துறவிகளோட தர்ம படி வண்டியில பயணம் செய்ய மாட்டாங்க , எங்க போனாலும் கால்நடையா தான் போவாங்க

       இப்படி போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது , அந்த ரெண்டு துறவில ஒருத்தர் வயசான ஆளு , இன்னொருத்தர் இளம் துறவி அதாவது நம்ப மொழில சொன்னா ஒருத்தர் சீனியர் , இன்னொருத்தர் ஜூனியர் ஆற்றை கடந்து போக தயாராகும் போது ஒரு இளம் பெண் அங்க வந்து அந்த துறவிங்க கிட்ட கேட்டாங்க ஐயா நானும் அடுத்த கரைக்கு போகனும் , என்ன அடுத்த கரைல விட முடியுமான்னு.

       உடனே இளம் துறவி எதுவும் பேசாம அந்த பெண்ணை தோள் மேல உக்கார வச்சிக்கிட்டு ஆத்துல இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டாரு , மூத்த துறவிக்கு கோபமா வந்தது அத வெளிக்காட்டிக்காம அவரும் ஆத்துல இறங்க மூணு பேரும் அடுத்த கரைக்கு போய் சேர்ந்தாங்க .

    இந்த நிகழ்வுக்கு பிறகு , ரெண்டு நாளா மூத்த துறவி நிம்மதியா இல்லாம் மன உளச்சலுக்கு ஆளானா மாதிரி இருந்தாரு கடைசில அந்த இளம் துறவிக்கிட்ட , நீ எப்படி அந்த பெண்ண தோள் மேல தூக்கலாம் , இது துறவிங்களுக்கு அழகா, நம்ப மடத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும், அப்படி ,இப்படின்னு இளம் துறவிய கடிச்சி துப்பாத குறையா திட்டினாரு , பொறுமையா கேட்ட இளம் துறவி ,மூத்த துறவிய பார்த்து சொன்னானாம்

  நான் அந்த பொண்ண ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஆத்தங்கரையிலேயே விட்டு வந்துட்டேன், நீங்க தான் ரெண்டு நாள மறக்காம மனசுக்குள்ள தூக்கிட்டு வந்து இருக்கீங்க, 

அந்த சம்பவம் நடந்த போது நாம மூணு பேர் மட்டும் தான் இருந்தோம், அந்த பெண்ணும் அங்கேயே இறங்கிடுச்சி, இப்ப நாம ரெண்டு பேருக்கு மட்டும் தான் இந்த விசயம் தெரியும் , வெளியுலகத்துக்கு சொன்னா நீங்க, இல்ல நான் தான் சொல்லனும்

போய் வேலையப்பாருங்கன்னு சொன்னானாம் இளம் துறவி

இப்ப தெரியுதா இவங்கள்ளா யாரு சீனியர் , யாரு ஜூனியர்ன்னு !